பாருங்கள்

கேளுங்கள்

Powered by eSnips.com

Thursday 23 November 2006

4 ''ர்'' களும் இருப்பும்


தேர்-(பீரங்கிகள்,ஆகாய விமானங்கள் உட்பட)
போர்-(எல்லைப் போர்,தேசீய இன விடுதலை போர் உட்பட)
பேர்-(பேர் பெற்ற எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட)
ர்-(விவசாயி மட்டுமே)
மனித இருப்பு இன்றைய காலகட்டத்தில்
இப்படியான அடுக்களில் இருக்கிறது.


ஆறு ஓடும் மண்ணில்-எங்கும்

நீர் ஓடும்

ஏர் ஓடும் எங்கும்-நம்

தேர் ஓடும்

போராடும் வேலையில்லை

யாரோடும் பேதமில்லை

ஊரோடும் சேர்ந்து

உண்ணலாம்......




அரச ஆட்சி அமைப்பில்
விவசாயிக்கு இருந்த
கொஞ்ச நஞ்ச மதிப்பு
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ
சமூக அமைப்பில்
முற்றாக பறிக்கப்பட்டு விட்டது.




தேர் கொண்ட மன்னன் ஏது?
பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவனின்றி
போர் செய்யும் வீரன் ஏது?


எல்லாமே-சாப்பாடு சமாச்சாரம் தான்.
பசி அடங்காத வரை
எந்த தத்துவம்தான் காதில் ஏறும்?
கண்ணில் தெரியும்?
.
சமமாய் பகிந்து உண்ணும்
பண்பு இந்த விவசாயியே
நமக்கு கற்று தருகிறான் இல்லையா?
அவன் புகழ் பாடும்
இந்த பாடல்
கன நாளாய்
என்தேடலில்...
உங்கள் ரசனைக்கும்!




powered by ODEO

Saturday 11 November 2006

மனிதனின் நம்பிக்கை



மேலே உள்ள படத்தை கொஞ்ச நேரம் பாருங்கள்
கீழே உள்ள வரிகளை கொஞ்சம் வாசியுங்கள்
பின்-
கீழே உள்ள பாடலை கேளுங்கள்

எனக்கு நம்பிக் கை இருக்கிறது-எனது
இந்த இடு கை
உங்களை(உங்களுக்கு) நம்பிக் கை கொடுக்கும்
எனக்கு.଻(எனக்கும்)

உழைக்கும் கைகள் எங்கே?
உண்மை இறைவன் அங்கே?
அணைக்கும் கைகள்
யாரிடமோ ஆண்டவன்
இருப்பது அவரிடமே!

கொடுத்தால் உண்டாவது தர்மம்
எடுத்தால் உண்டாவது பாபம்
மனத்தாலும் இன்னொருவரின் பொருளை
நினைத்தாலும் உன் நிம்மதி மறையும்



powered by ODEO
Flickr.com வழியாக கைகள்
கொடுத்த camera கண்களான
FLICKR.WHIKR
YILUD
AQVNONO
IRINA LOANA
நன்றிகள்!!!